பா.டெனிஸ்வரனின் மாகாண அமைச்சு பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையை எதிர்த்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெனிஸ்வரனின் அமைச்சு பதவியை பறிக்கும் முதலமைச்சரின் கட்டளையை ரத்து செய்து அவருக்கு மீண்டும் அந்த பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
எனினும் இந்த உத்தரவுக்கு ஏற்ப தற்போது வடமாகாண அமைச்சர்கள் சபையில் உள்ள எவரையும் பதவி நீக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என சுட்டிக்காட்டி வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அதற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு இன்று உயர் நீதிமன்றில் 3 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமினால் பரிசீலிக்கப்பட்ட போதே அதனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM