பாலியல் வல்லுறவுக்குட்ப டும் பெண்கள், அவர்களுக்கு ஏற்படும் கடும் அதிர்ச்சி காரணமாக அந்த சம்பவத்தால் கர்ப்பந்தரிக்க முடியாது என கருத்து வெளியிட்டு அமெரிக்க இடாஹோ பிராந்திய செனட்சபை உறுப்பினர் கடும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளார்.
ரெப் பற் நியல்ஸன் என்ற மேற்படி செனட் சபை உறுப்பினர், பாராளுமன்ற செனட் சபையில் கருக்கலைப்பு தொடர்பில் இடம்பெற்ற விவாதமொன்றில் உரையாற்றுகையிலேயே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
பெண்களின் கருத்தரிப்பதற்கான ஆற்றலுக்கு அவர்கள் சம்மதத்துடன் பாலியல் உறவில் ஈடுபடுவது உயிரியல் ரீதியான காரணியாகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதனால் பாலியல் வல்லுறவு சம்பவங்களின் போது பெண்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாவதால் அவர்கள் கர்ப்பமடைய வாய்ப்பில்லை என தெரிவித்த ரெப் பற் நியல்ஸன், தான் பல வருட கால தகவல்களின் பிரகாரம் 5 பெண் பிள்ளைகளுக்கு தந்தை என்ற ரீதியில் இதனைத் தெரிவிப்பதாக கூறினார்.
இந்நிலையில் அவரது கருத்தானது பாலியல் வல்லுறவுக்குட்பட்டு கர்ப்பந்தரித்துள்ள பெண்கள், அந்தக் குற்றச்செயலின் போது எதிர்க்காமல் இணக்கமுடன் இருந்துள்ளதாக தவறான எண்ணத்தை தோற்றுவிப்பதாக உள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டு கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM