தர்கா நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல எழுத்தாளர் இர்பான் ஹாபிஸ் தனது 37 ஆவது வயதில் நேற்றுக் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா தொழுகையும் நல்லடக்கமும் இன்று காலை 9 மணிக்கு தர்கா நகர் தெருப் பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரும்பு சஞ்சிகையின் ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான ஹாபிஸ் இஸ்ஸதீனின் புதல்வரான இவர், Duchenne Muscular Dystrophy (DMD) எனும் அரியவகை நோயினால் தனது 4 வயதிலிருந்து பாதிக்கப்பட்டிருந்தார்.
இர்பான் ஹாபிஸ், தனது 18 வயதிலிருந்து எழுந்து நடமாட முடியாத நிலையில் கட்டிலிலேயே தனது வாழ்வைக் கழித்து வந்தார்.
மிகுந்த திறமையும் விடா முயற்சியும் கொண்ட இவர், இதுவரை Silent Thoughts, Moments of Merriment , Silent Struggle எனும் மூன்று நூல்களை ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளார். தனது நான்காவது நூலையும் எழுதிக் கொண்டிருந்த நிலையிலேயே இவர் எம்மைவிட்டும் பிரிந்துள்ளார்.
தனது சொந்த முயற்சியாலும் தந்தை மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பாலும் ஆங்கில மொழியைப் பயின்று கொண்ட இவர், குறித்த நோயினால் முழு உடலும் இயக்கமற்றிருந்த நிலையில் தனது ஒரு விரலை மாத்திரம் பயன்படுத்தி மடிக்கணினியிலும் கையடக்கத் தொலைபேசியிலும் தட்டச்சு செய்தே மேற்படி மூன்று நூல்களையும் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த மே மாத இறுதியில் Nas Daily எனும் சர்வதேச ஊடகம் இர்பான் ஹாபிஸ் தொடர்பில் வெளியிட்ட 1 நிமிட வீடியோ தொகுப்பின் மூலம் இவர் சர்வதேச அளவில் பிரபல்யம் பெற்றிருந்தார்.
இந்த வீடியோ வெளியிடப்பட்ட முதல் 4 நாட்களில் மாத்திரம் 1 கோடி தடவைகள் பார்வையிடப்பட்டிருந்தது. நேற்று அவர் மரணிக்கும் வரை குறித்த வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 75 இலட்சத்தை தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் எழுதிய புத்தகங்கள்..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM