ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை அணி ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.அத்தோடு இத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகின்றது.
அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் சந்தேகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஆசிய கிண்ணப் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடத்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி டுபாயில் ஆசிய கிண்ணத் தொடர் ஆரம்பமாகின்றது.
இப் போட்டிகள் அபுதாபி மற்றும் டுபாயில் நடத்தப்படுகின்றன. ஆசிய கிண்ணத்தில் விளையாடுவதற்கு இலங்கை, நடப்பு சம்பியனான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
இதில் எஞ்சிய ஒரு இடத்துக்காக ஹொங்கொங், மலேசியா, நேபாளம், ஓமான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.
பிரிக்கப்பட்டுள்ள இரு குழுக்களில் "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் நாடும் "பி" பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
முதலிரு இடங்களைப் பெறும் அணிகள் "சுப்பர் – 4" சுற்றுக்கு முன்னேறும். ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோதும்.
இதில் அதிக புள்ளிகளைப் பெறும் முதலிரு அணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28-ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இலங்கை அணி தனது முதல் போட்டியில் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி பங்களாதேஷுடன் மோதுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM