திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் அவரைப் பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம் என தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘துணை முதல்வர் பன்னீர் செல்வம், மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே சந்திப்பு நடைபெறவில்லை. என்றாலும் ஒரு உண்மை வெளியாகியுள்ளது. தனிநபர் ஒருவருக்காக ராணுவ விமானத்தை எப்படி கொடுத்தார்கள் என்பது மர்மமாக உள்ளது.
அந்த ராணுவ விமானத்தை பயன்படுத்திய குற்றத்திற்காக துணை முதல்வர் பதவியிலிருந்து ஓ பன்னீர்செல்வம் பதவி விலகவேண்டும். அதுபோல அந்த விமானத்தை அனுப்பிய நிர்மலா சீதாராமனை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகவேண்டும்.
ஆளுநரைச் சந்தித்து இந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து மனு கொடுத்துள்ளோம். விரைவில் இந்த ஆட்சி அகற்றப்படும். அத்துடன் ஓ பி எஸ்ஸும், இ பி எஸ்ஸும் சிறையில் இருக்கநேரிடும்.
கலைஞர் அண்மையில் காவேரி வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் வைத்தியர்கள் வீட்டிற்கு சென்று சிகிச்சையளித்தனர்.
தற்போது அவர் ஆரோக்கியத்துடன் உள்ளார் மற்றவர்கள் பயப்படும் படியோ அல்லது அதிர்ச்சியடையும் படியோ எதுவும் இல்லை. ஆனால் வதந்தி பரவியுள்ளது. இந்த வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தலைவர் கலைஞர் நலமாக உள்ளார்.’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM