தனது வகுப்பில் கல்வி கற்கும் சின்னஞ்சிறு சக மாணவர்கள் மீது பாலியல் ரீதியில் தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட் டில் 4 வயது அவுஸ்திரேலிய சிறுவன் ஒருவன் பராமரிப்பு நிலையத்தில் நாள் முழுவதுமான கடும் கண்காணிப்பின் கீழ் கல்வியைத் தொடர நிர்ப்பந்திக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சிறுவர்கள் அபிவிருத்தி துறையில் பேராசிரியராக பணியாற்றிய பிரெடா பிறிக்ஸ், பாடசாலைச் சிறுவர்கள் மத்தியில் இணையத்தள ஆபாசப் படங்களின் தாக்கம் குறித்து அந்நாட்டு செனட் சபைக்கு அண்மையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
பிராந்திய ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் குறிப்பிட்ட சிறுவன் தனது சக மாணவர்கள் பலரிடம் வாய் மூல மற்றும் உடல் ரீதியான பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சிறுவன் இணையத்தளத்தில் வெளியாகும் ஆபாசப் படங்களால் கவரப்பட்டே இவ்வாறு தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளதாக பிரெடா பிறிக்ஸ் கூறினார்.
பேராசிரியர் பிரெடா பிறிக்ஸ் 2000 ஆம் ஆண்டில் சிரேஷ்ட அவுஸ்திரேலியராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பி டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM