கொழும்பு - மெலிபன் வீதியில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காம் மாடியில் உள்ள விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தின் களஞ்சியசாலையில் திடீரென தீ பரவியதால் அப் பகுதியில் சற்று பதற்ற நிலை தோன்றியுள்ளது.
தீயணைப்பு துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து தீயிணை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
விளையாட்டு பொருட்கள் விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை முற்றாக தீயில் கருகியுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்இச்சம்பவத்தின் போது உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM