ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31 ஆவது கூட்டத் தொடர் இன்ற திங்கட்கிழமை 29 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில் முதலாவது அமர்வின்போது உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் எந்த விடயத்தையும் குறிப்பிடவில்லை.
செய்ட் அல் ஹுசேன் தனது நீண்ட உரையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாகவும் இலங்கையின் மனித உரிமை நிலை குறித்தும் இலங்கை குறுகிய விளக்கத்தை அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டபோதும் அவர் எதனையும் குறிப்பிடவில்லை.
மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு எந்தவொரு தினமும் நிகழ்ச்சி நிரழ் அட்டவணையில் ஒதுக்கப்படவில்லை.
இம்மாதத்தின் ஆரம்ப பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்திருந்தார். தனது விஜயத்தை முடித்துக்கொண்டு கருத்து வெளியிட்டிருந்த ஹுசென் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பது இலங்கையின் இறைமை தொடர்பான முடிவாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM