போதைப்பொருள் கடத்தலிற்கான மையமாக இலங்கை மாறியுள்ளது என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இலங்கை போதைப்பொருள் கடத்தலின் மையமாக மாறியுள்ளது இது குறித்து எங்களிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
சில வகையான போதைப்பொருட்களை உள்நாட்டில் விற்பதற்காக கடத்திவருகின்றனர். கடந்த வருடம் நாங்கள் 1500 கிலோ கொக்கெய்னை கைப்பற்றினோம் இது பெருமதியான போதைப்பொருள் ஆனால் இலங்கையில் இது பயன்படுத்தப்படுவதில்லை இதன் மூலம் போதைப்பொருள் கடத்தலிற்கான தளமாக இலங்கை மாறியுள்ளது என்ற முடிவிற்கு நாங்கள் வரலாம்.
இதனை முறியடிப்பதற்கு நாங்கள் சர்வதேச சமூகத்தின் உதவியை பெற தீர்மானித்துள்ளோம், நாங்கள் இந்த அடிப்படையில் செயற்படுகின்றோம்.
இந்த விடயத்தில் நான் எந்த அரசியல் தலையீட்டையும் எதிர்கொள்ளவில்லை, எந்த அமைச்சரும் இது குறித்து என்னுடன் பேசவில்லை, இந்த நிலைமையை கையாள்வதற்காக விசேட பிரிவுகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம், நாங்கள் பலரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்,வெளிநாடுகளில் வாழ்பவர்களே இதனை தூண்டுவது எங்களிற்கு தெரியவந்துள்ளது,சிலர் தங்கள் சிறைகளில் இருந்தவாறே இவற்றை செய்கின்றனர், இது பாரிய பிரச்சினையாக உள்ளது.
ஆகக்குறைந்தது நான்கு பாதாள உலக குழுத்தலைவர்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM