பீட்டில்ஸ் என அழைக்கப்படும் பிரிட்டனை சேர்ந்த ஐஎஸ் உறுப்பினர்களிற்கு அமெரிக்காவில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு வெளியிடப்போவதில்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயக படையணியால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு ஐஎஸ் உறுப்பினர்கள் தொடர்பிலேயே பிரிட்டன் இவ்வாறுதெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட இரு உறுப்பினர்களும் ஐஎஸ் அமைப்பின் படுபயங்கரமான வீடியோக்களில் தோன்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மனிதாபிமான பணியாளர்களை பணயக்கைதிகளாக பிடிக்கும் இவர்கள் அவர்களை விடுவிப்பதற்காக கப்பம் கோரும் வீடியோக்களை வெளியிட்டதுடன் சிலரை கொலை செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டிருந்தனர்.
இவ்வாறு இவர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களில் அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ்பொலியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இவர்களிற்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்ர்பு தெரிவிக்கப்போவதில்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இரு ஐஎஸ் உறுப்பினர்களிற்கும் மரணதண்டனையை வழங்கவேண்டாம் என பிரிட்டன் கோரப்போவதில்லை என அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் சஜித் டேவிட் அமெரிக்க சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மரணதண்டனை வழங்கவேண்டாம் என கோராமலிருப்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மரணதண்டனையை எதிர்க்கும் பிரிட்டனின் நீண்டகால கொள்கையில் இதன் காரணமாக மாற்றம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜேம்ஸ்பொலியின் தாய் இவர்களிற்கு மரணதண்டனை வழங்கினால் அவர்களிற்கு தியாகிகள் அந்தஸ்த்து கிடைக்கும் என்பதால் அவர்களை சிறைக்கு அனுப்புமாறு கோரியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM