எமது போராட்டத்தின் வடிவம் மாற்றப்பட்டுள்ளதே தவிர எமது உறவுகளுக்கு முடிவு கிடைத்த பின்னரே எமது போராட்டத்தை கைவிடுவோம் என்றும் அதுவரை எமது போராட்டம் தொடருமென முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடிதரக் கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது கடந்த 18 ஆம் திகதி 500 ஆவது நாளில் அந்த இடத்தில் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆனால் அது எமது போராட்ட முடிவல்ல அந்த இடத்தில் எமக்கு பாரிய சிக்கல்கள் இருந்தது. எனவே அந்த இடத்தில் எமது போராட்டத்தை நிறுத்தி மாற்றுவழியில் போராட முடிவெடுத்தோம் அதன்விளைவாக எமக்கான அலுவலகம் ஒன்றை அமைத்து அதில் இருந்து போராடுகிறோம்.
எமது போராட்டம் எமது உறவுகள் கிடைத்தாலே அன்றி நிறுத்தப்படாது. காலத்துக்கு காலம் வடிவங்களை மாற்றி போராடிக்கொண்டே இருப்போம் என உறவுகள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை பத்துமணியளவில் மாங்குளம் வீதியில் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் தமக்கான இணைப்பு அலுவலகத்தை திறந்து போராட்டத்தை தொடரும் உறவுகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM