அம்பன்பொல- வலத்வெவ, அம்போகம பிரதேசத்தில் தாயின் கள்ளக்காதலனால் மகன் ஒருவர் படு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த 28 வயதுடைய இளைஞரின் தலையில் காணப்பட்ட காயத்தினை அடையாளம் கண்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலமே தாயின் கள்ளக் காதலனால் இளைஞன் படுகொலை செய்யப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தோடு தொடர்புடைய 54 வயதான தாயின் கள்ளக் காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரனையின் மூலம் உயிரிழந்த இளைஞர் மற்றும் கைது செய்யப்பட்ட நபருக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு காரணமாக இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை இன்று மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குருணாகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM