ஜேர்மனியில் ஓடும் பஸ்ஸில் பயங்கரம்

Published By: Rajeeban

21 Jul, 2018 | 09:03 AM
image

ஜேர்மனியில் பேருந்தொன்றில் பத்துபேரை கத்தியால் குத்திகாயப்படுத்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் வடபகுதி நகரான லுயிபெக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த நகரை சேர்ந்த 34 வயதான ஜேர்மனிய பிரஜையே இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

அந்த நபர் தீவிரவாதமயப்படுத்தப்பட்டிருந்தார் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என ஜேர்மனியின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பேருந்தில் காணப்பட்ட முதுகுப்பையிலிருந்து புகைவந்ததாகவும் எனினும் அதற்குள் ஆபத்தான பொருட்கள் எவையும் இருக்கவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட நபர் ஈரானில் பிறந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவரும் கொல்லப்படடவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் தாக்குதலை மேற்கொண்ட நபர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து விபரங்களை வெளியிட்டுள்ள பயணிகள் பயணியொருவர் முதிய பெண்மணியொருவருக்கு தனது ஆசனத்தை வழங்கிய சில நிமிடங்களில் இந்த நபர் அவரை கத்தியால் குத்தினார் என குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13