வடக்கிற்கு உத்தியோக பூர்வ விஜயம்மேற்கொள்ளவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இந்திய அரசின் உதவியுடன் வழங்கப்பட்டுள்ள புதிய நோயாளர் காவு வண்டி சேவையினை ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
பிற்பகல் 1.30 மணிக்கு கிளிநொச்சி இரணை மடு சந்தியில் இடம்பெறும் கம்பெரெலிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பிரதமர் பிற்பகல் 3.30 மணிக்கு இந்திய அரசின் உதவியுடன் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவு வண்டி சேவையினை ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
இந் நிகழ்வானது யாழ்பாணம் மாநகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன் அதில் பிரதமருடன் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். அத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இணையம் மூலமாக அங்கு உரையாற்றவுள்ளார்.
இந் நிகழ்வைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் ரில்ஹோ விருந்தினர் விடுதியில் தேசிய சுயதொழில் விருது நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெறும் தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரமர் கலந்துகொள்ளவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM