பறந்துகொண்டிருந்த விமானத்தின் இறக்கைப்பகுதி தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசி மூலம் எடுத்த காணொளி ஒன்று இணையத்தளங்களில் பரவி வருகிறது.
தென்னாப்பிரிக்காவின் ஒண்டர்பூம் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் புறப்பட்டுச் சென்ற சிறிய ரக உள்நாட்டு விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. குறித்த விமானம் மேலெழும்பிய சில மணி நேரத்தில் விமானத்தில் சிக்கல் ஏற்பட்டதால் விமானத்தின் ஒரு பக்க இறக்கை தீப்பிடித்து எரிந்தது.
அதைப் பார்த்ததும் பயணிகள் அச்சமடைந்தனர். இருந்தும் பதட்டப்படாத விமானிகள் சாதுரியமாக செயற்பட்டு விமானத்தை மீண்டும் கீழ் நோக்கி திருப்பி தரை இறக்கினார்கள்.
எனினும் அந்த விமானம் பால் பண்ணை வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் இருந்த 19 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
இச்சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது. இத்தனை பதட்டத்துக்கு இடையே பயணி ஒருவர் விமானம் தீப்பிடித்ததை காணொளி ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். திகிலூட்டும் வகையில் அமைந்துள்ள அந்த காணொளி இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே குறித்த விபத்தில் விமானி மற்றும் தொழிலாளர் என இருவர் பலியானதாகவும், 2 விமானிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM