இறுதிப்பாவனைக்காக பண்டங்களையும் சேவைகளையும் பயன்படுத்துவோர் நுகர்வோர் ஆவர். ஒரு நாட்டின் சனத்தொகை அந்நாட்டின் நுகர்வோராகக் கருதப்படுகின்றனர். தற்போது இலங்கையின் மொத்த நுகர்வோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 21 மில்லியன் ஆகும். இவ்வாறு நுகர்வோரின் தேவைகளையும் விருப்பங்களையும் அறிந்து நுகர்வோரின் திருப்தியை இலக்காகக் கொண்டு செயற்படும் வணிகங்கள் தமது உற்பத்தியினை விற்பனை செய்ய பல்வேறு நுட்பங்களை கையாளுகின்றன.இவ்வாறான நுட்பங்களில் விளம்பரப்படுத்தலும் மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. விளம்பரங்களினூடாக நுகர்வோருக்கு பொருள் பற்றிய தகவல்கள் வழங்கப்படுகின்றன. இதனூடாக நுகர்வோர் பொருள் பற்றிய விபரங்களை இலகுவாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் விளம்பரங்களின் பங்களிப்பு வணிகங்களின் வெற்றியிலக்கிற்கு பெரும்பங்கினை வகிக்கின்றது. காரணம் அதிக போட்டியினை கொண்டிருக்கும் வணிகச் சந்தையில் போட்டியினை எதிர்கொண்டு தமது பொருட்கள் சேவைக்கான வாய்ப்பினை பெற்றுக்கொள்ள வணிகங்கள் விளம்பரத்தை ஒரு உத்தியாகக் கையாளுகின்றன.
தற்போது விளம்பரங்களானவை ஒரு பொருளின் தன்மையை நுகர்வோருக்கு தெரிவிக்கும் வகையில் மட்டுமே அமையாமல் மெருகூட்டப்பட்ட (DECEPTIVE ADS OR PUFFERY) வகையிலும் அமையப் பெறுகின்றன. காரணம் தனது பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக விற்பனையாளர்கள் பொய்யான அல்லது மிதமிஞ்சிய தகவல்களையும் விளம்பரங்களினூடாக தெரிவிக்க முற்படுகின்றனர்.
இவ்வாறான விளம்பரங்களினூடாக நுகர்வோர் கவரப்படுகின்றனர். காரணம் அவர்களின் எதிர்பார்ப்புக்களும் விருப்பங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. இதனால் விளம்பரங்கள் இலகுவான வழியில் நுகர்வோரின் மனங்களை கவர்கின்றன. இதனூடாக இன்றைய வணிக நிறுவனங்கள் புதிய பொருட்களை அறிமுகம் செய்வதிலும் சந்தையில் பின்தங்கிய பொருட்களின் விற்பனையை மேம்படுத்தவும் விளம்பரங்களை சிறந்ததொரு வழியாக கையாளுகின்றனர்.
தற்போது விளம்பரங்கள் சகல துறைகளிலும் தனது பாரிய பங்களிப்பினை செய்துவருகின்றன. பொதுவாக நுகர்வோரின் நுகர்வு நடவடிக்கையானது இரண்டு வகையின,
1.உணர்ச்சிவசப்பட்ட நுகர்வு (IMPULSIVE BUYING)
2.நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட நுகர்வு (COMPULSIVE BUYING)
விளம்பரங்களானவை பொதுவாக நுகர்வோரின் உணர்ச்சிவசப்பட்ட நுகர்விலே அதிக தாக்கம் செலுத்துகின்றன. அதாவது வழியில் செல்லும் போது தென்படும் விளம்பர பலகையில் காணப்படும் உணவிற்கான (FAST FOOD) விளம்பரமானது நுகர்வோரை நுகர்விற்காக தூண்டுகிறது. மேலும் இன்றைய உலகமானது கணினி மயமாகி வருகின்றது. இதற்கேற்ப புதிய இலத்திரனியல் சாதன விளம்பரங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கேற்ப நுகர்வில் பங்களிப்புச் செய்கின்றது. உதாரணமாக, தொடுதிரை கைத்தொலை பேசிகளின் (TOUCH SEREEN MOBILE PHONES) நுகர்வு அதிகமாக காணப்படுகிறது. காரணம் இவை உலகம் எங்கள் கையில் என்ற அடிப்படையில் வெளியிடப்படும் விளம்பரங்களின் தாக்கமாகக் கூட இருக்கலாம்.
எந்தவொரு துறைசார் வியாபாரமானாலும் விளம்பரங்களினூடாகவே மக்களை கவர முற்படுகின்றார்கள். ஒரு சில தனியார் வகுப்புக்களை பொறுத்தவரையில் அதிக மாணவர்களை கவரும் வகையில் தரமான சேவை குறைவான விலையில் என்ற அடிப்படையில் தரமற்ற சேவை கூடிய விலையில் வழங்கப்படுகின்றது என்பதனை நாம் அறிவோம். அதே போல வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கான விளம்பரங்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை எதிர்பார்க்கும அல்லது உள்நாட்டில் வேலையற்ற வேலை தேடிக் கொண்டிருக்கும் மக்களிடையே பெரிதும் தாக்கத்தை செலுத்துகிறது. மக்கள் பொதுவாக அதிகம் சம்பாதிக்கும் ஆசையில் வெளிநாடுகளுக்கு சென்று பெரும் துன்பத்தையே சம்பாதிக்கிறார்கள் என்பதனை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். (குறிப்பாக வீட்டுப் பணிப்பெண்கள்) இவ்வாறான நிலைமையானது அதிக சம்பளம் ஆடம்பர வாழ்க்கை என்ற எதிர்பார்ப்பினாலும் தமது எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட விளம்பரத்தினாலும் கிடைக்கப்பட்ட வெகுமதிக ளாகும். எனவே நுகர்வோர் அறிவுக் கூர்மையுடன் தமது நுகர்வு நடவடிக்கையினை மேற்கொள்வது அவசியமா கின்றது. காரணம், போலியான பொருள், சேவை நுகர்விலிருந்து பாதுகாத்துக் கொள் ளவும் சிறந்த நுகர்வு நடவடிக்கையில் ஈடுபடவும் நுகர்வோர் சற்று விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமான தொன்றாகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM