மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கத்தால் மூவாயிரத்து நானூறு மலசலகூடங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இது குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவும் இலங்கையும் ஒரு சுகாதாரத்துறை செயற்றிட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை நேற்று கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய நாட்டின் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 3400 கழிவறைகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித்சிங் சந்து, மீன்பிடி நீரியல் வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரேணுக்கா ஏக்கநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM