மும்பையில் பிறந்த குழந்தைக்கு போட்டப்பட்ட தடுப்பூசி 2 செ.மீற்றர் நீளத்திற்கு முறிந்து உடலுக்குள் சென்ற நிலையில் ஒரு மாதத்துக்கு பின் அகற்றப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள செம்பூர் பகுதியை சேர்ந்த தம்பதி ஜெய்ராஜ், ஆஸ்தா கெய்க் வாட் இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குறித்த குழந்தை பிறந்த 19ஆவது நாளில் வைத்தியசாலையில் வைத்து இடுப்பில் தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்ட இடத்தில் குழந்தையின் உடலில் வீக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து குழந்தை கடும் காய்ச்சலால் அவதியுற்றது. எனவே குழந்தையை உள்ளூர் வைத்திருந்த பெற்றோர் கொண்டு சென்றனர்.
பரிசோதித்த வைத்தியர் குழந்தையின் உடலில் தடுப்பூசி போட்ட இடுப்பு பகுதியில் எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் போன்றவை எடுத்து பார்த்த போது எலும்புக்குள் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து மும்பையில் வேறு ஒரு தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார். அங்கு இடுப்பு பகுதியில் நோய் தொற்று ஏற்பட்ட இடத்தில் சத்திர சிகிச்சை நடத்தப்பட்டது. அப்போது இடுப்பு எலும்பு சந்திப்பில் 2 செ.மீற்றர் நீள ஊசி முறிந்த நிலையில் உள்ளேயே தங்கியிருந்ததை பார்த்து வைத்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் கவனமாக 2 மணி நேரம் சத்திர சிகிச்சையின் பின் ஊசியை உடலில் இருந்து அகற்றினர். தற்போது குழந்தை நலமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM