கரும்புச் செய்கைக்காக சீன அரசாங்கத்தின் கம்பனியொன்றுக்கு மட்டக்களப்பு குடும்பிமலையில் 68250 ஹெக்டேயர் காணியை வழங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - குடும்பிமலையில் சீன அரசாங்கத்தின் கம்பனி ஒன்றுக்கு கரும்புச் செய்கைக்கு காணி வழங்க இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாருக்கு புதன்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்), ஏறாவூர்பற்று (செங்கலடி) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை மையமாக கொண்டதான குடும்பிமலை பகுதிக்கு அண்மித்த 68250 ஹெக்டேயர் காணியை இலங்கை அரசாங்கம் யாருக்கும் தெரியாமல் சீன அரசாங்க கம்பனி ஒன்றுக்கு கரும்புச் செய்கைக்கு வழங்க இரகசிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது என சில ஆதாரங்களுடன் அறிந்துள்ளேன்.
இதேவேளை கரும்புச் செய்கையானது நில வளத்தை பாதிப்பதுடன், எதிர்காலத்தில் மக்கள் பஞ்சத்தில் வாழ வழியேற்படுத்தும்.
முன்னர் சிங்கள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரும்புச் செய்கை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இக்கரும்புச் செய்கையை தமிழ் மக்களின் வாழிட பகுதிக்கு கொண்டு வருவது தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கச் செய்யும் நோக்கமாகும்.
எனவே இத்திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்த அனுமதிக்க முடியாது. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இச்செயற்பாடு சார்பாக ஆராய்வதற்கு இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இக் கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லா கம, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி.அனுர தர்மதாஸ, செங்கலடி பிரதேச செய லாளர் ந.வில்வரெட்ணம் ஆகியோரு க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM