வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத வீதியில் இன்று இரவு 8.15 மணியளவில் துவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள மரக்கறி வியாபார நிலையத்திற்கு ஒருவர் தனது துவிச்சக்கரவண்டியினை வீதியில் தரித்து விட்டு சென்றுள்ளார்.
இதன் போது அந்த துவிச்சக்கரவண்டியினை 25 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவர் அபகரித்துச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதனை அவதானித்த நபரொருவர் இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளார். இதன் போது குறித்த இளைஞனை அவ்விடத்தில் நின்ற நபர்கள் நையப்புடைத்துள்ளார்கள்.
பின்னர் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த இளைஞன் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM