பாதாள உலக குழுவினரை பாதுகாக்கின்றேனா? மறுக்கின்றார் பொன்சேகா

Published By: Rajeeban

18 Jul, 2018 | 10:01 PM
image

பாதாளஉலக குழுக்களை சேர்ந்தவர்களிற்கு தஞ்சமளிப்பதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார்.

தனது பெயருக்கு களங்கத்தையும் தனக்கு நெருக்கடியையும் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் இதுவென அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளிகள் ஐவருக்கு அமைச்சர் ஒருவர் மெய்ப்பாதுகாவலர் வேலையை வழங்கியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன, எனகுறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா ஓரு ஊடகம் தன்னுடைய பெயரையும் படத்தையும் பயன்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது, மற்றைய ஊடகம் எனது பெயரை குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

எனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை அவர்களுக்கும் எனது பாதுகாப்பு தேவையில்லை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனக்கு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு வழங்குகின்றனர், என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா இந்த செய்தியை வெளியிட்டுள்ள பத்திரிகையாளரிற்கு தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல் இருக்கவேண்டும்,அவர் என்னை முன்னமும் விமர்சித்துள்ளார்,எனது அமைச்சு அவரிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும், அரசியல் சக்தியொன்று அவரின் பின்னால் உள்ளது எனவும் அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09