பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லீற்றர் மண்ணெண்ணெயால் ரூபா 23.89 நட்டம் ஏற்படுவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் மைத்திரி ஜயந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'விலை அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலையை மீனவர்களின் கேரிக்கையினால் ரூபா 70 ஆக குறைத்தோம். ஆனால் எமக்கு தற்போதும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு ரூபா 93.89 ஒதுக்கவேண்டியுள்ளது. எவ்வாறாயினும் நாங்கள் நட்டத்திலேயே ஒரு லீற்றரை ரூபா 70 விற்கு விநியோகிக்கின்றோம்.
எரிபொருள் சூத்திரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கும் அது பற்றி அறிவிக்கப்படும். பெரும்பாலும் எரிபொருள் சூத்திரம் திறைசேரியினால் தீர்மானிக்கப்படும்.
நாம் உலக சந்தையில் எரிபொருள் விலை உயரும் போது உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கவும், உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது உள்நாட்டில் எரிபொருள் விலை குறையும் வகையில் எரிபொருள் சூத்திரத்தை வடிவமைத்துள்ளோம்.
நாம் அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் அதற்கான குழுவை அமைத்துள்ளோம். அந்தக் குழுவால் வழங்கப்படும் ஆலோசனைக்கமைவாகவே விலையின் ஏற்ற இறக்கம் தொடர்பாக தீர்மானிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM