வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்ட கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடத்தின் தரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த கட்டடத்தின் வெடிப்பு பகுதிகளை ஒப்பந்த காரர்கள் பூசி மெழுகும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்ததால் அது நிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டுமான பணிகளின் தரம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாகாண சமூக சேவைகள் பணிப்பாளருக்கு பணித்திருந்த நிலையில் குறித்த கட்டடத்தின் வெடிப்புக்களை ஒப்பந்தகாரர்கள் பூசி மறைக்கும் செயற்பாட்டுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பசுப்பதிபிள்ளை மற்றும் தவநாதன் ஆகியோர் தலா இருபது இலட்சம் ரூபா நிதியிலும், மாகாண சபை உறுப்பினர் அரியரத்தினத்தின் இரண்டு இலட்சம் ரூபாவுமாக 42 இலட்சம் ரூபாவுக்கு அமைக்கப்பட்ட புதிய கட்டத்தின் பல பகுதிகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு, 42 இல்ட்சம் ரூபா பெறுமதியில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது
இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை மற்றும் மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததினை அடுத்து முதலமைச்சர் மேற்படி பணிப்புரையை வழங்கிய நிலையிலேயே இந்த குறித்த தடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM