இந்தியா - பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின்முன் இருந்த மரத்தில் இக்பால் சிங் என்ற பொலிஸ் உத்தியோகத்தரையே கட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி அறிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இக்பால் சிங்கை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் குறித்த பொலிஸ்உத்தியோகத்தர் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதால் தான் அவரை தாக்கினேன் என கூறியுள்ளார்.
சம்பவம் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பொலிஸ் உத்தியோகத்தரை விசாரணை செய்ததில், அந்த பெண் உள்ளூர் கடையிலிருந்து சலவை இயந்திரம் ஒன்றை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், அதை பற்றி விசாரிக்க பெண்ணின் வீட்டிற்கு சென்ற பொழுது குறித்த பெண் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இருவரும் அளித்த புகாரின் பேரில் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி அந் நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM