யாழ். கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டு எச்சங்கள் குறித்து புதிய தகவல் 

Published By: Priyatharshan

18 Jul, 2018 | 10:41 AM
image

யாழ்.கோட்டையின் உட்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சம் போர்த்துக்கீசர் காலத்தினுடையதாக இருக்கலாம் என நம்புகின்றோம் என தொல்லியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

யாழ்.கோட்டையின்  உட்பகுதியினுள் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளின் போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அது தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

அது குறித்து மேலும் தெரிவிக்கையில் , 

யாழ்ப்பாண கோட்டை அமைந்துள்ள பகுதியானது சோழர் காலத்திற்கு முற்பட்ட காலத்திற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அதற்கான ஆதராங்கள் சில கிடைக்க பெற்றுள்ளன. 

கோட்டை அமைந்துள்ள பகுதிகளில் கடந்தவருடம் (ஸ்கானர் மூலம் ) ஆய்வுகளை மேற்கொண்ட வேளை கோட்டை அமைந்துள்ள பகுதிகளின் கீழ் போர்த்துக்கீசர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்று படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தற்போது அமெரிக்க பல்கலைகழகம் , யாழ். பல்கலைகழகம் , தொல்லியல் திணைக்களம் , மத்திய கலாச்சார நிலையம் என்பவற்றின் கூட்டு செயற்திட்டமாகவே இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

கோட்டையின் உட்புறமான மத்திய பகுதியில் முன்னதாக போத்துக்கீசர் காலத்து தேவாலயம் ஒன்று இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளான. தேவாலயத்திற்கு அருகில் கிணறு ஒன்று இருந்தமைக்கான சான்றுகளும் , தேவாலய சுவர்கள் இருந்தமைக்கான சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன. 

இந்நிலையிலேயே நேற்றைய தினம் அகழ்வுப் பணியின் போது மனித எழும்பு எச்சம் மீட்கப்பட்டன. அது போத்துக்கீசர் காலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் எலும்பு எச்சங்கள் என நம்புகின்றோம்.

ஏனெனில் போத்துக்கீசர் காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது மேற்கு நோக்கியவாறே அடக்கம் செய்யும் பழக்கம் இருந்தது. 

அதன் பின்னரான கால பகுதியில் தான் இறந்தவர்களை கிழக்கு திசை நோக்கி அடக்கம் செய்யும் பழக்கம் வந்தது. ஆகவே அவை போர்த்துக்கீசர் காலத்திற்கு உரியவையாக இருக்கலாம் என நம்புகின்றோம். 

ஆய்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முதல் நாம் எதனையும் உத்தியோகபூர்வமாக செல்ல முடியாது. 

மீட்கப்பட்ட எலும்பு எச்சம் தொடர்பில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஆய்வுகளின் பின்னரே உத்தியோகபூர்வமாக தெரிவிக்க முடியும் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29