கட்டட இடிபாடுகளில் சிக்கி மூவர் பலி ; பலரை தேடும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர்

Published By: Vishnu

18 Jul, 2018 | 10:35 AM
image

இந்தியாவின் உத்திரப்பிரதேஷ் மாநிலத்தில் நொய்டா பகுதியில் இரண்டு கட்டடங்கள் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

நேற்றிரவு நொய்டா பகுதியிலுள்ள ஷாபரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழ ஆரம்பித்தது. இதனால் அதன் அருகாமையில் இருந்த 4 மாடி கட்டடமும்  இதனுடன் சேர்ந்து இடிந்து வீழ்ந்தது.

இவ் விபத்தில் நான்கு மாடிக் கட்டடத்தில் வசித்து வந்த 18 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 க்கும் அதிகமானோர் இடிபாடிகளில் சிக்கியிருக்கலாம் என்பதுடன் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

கட்டடங்கள் இடிந்து வீழ்ந்த தகவல் அறிந்த மீட்பு படையினரும் தீயணைப்புத் துறையினரும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி இதுவரை உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47