இந்தியாவின் உத்திரப்பிரதேஷ் மாநிலத்தில் நொய்டா பகுதியில் இரண்டு கட்டடங்கள் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
நேற்றிரவு நொய்டா பகுதியிலுள்ள ஷாபரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழ ஆரம்பித்தது. இதனால் அதன் அருகாமையில் இருந்த 4 மாடி கட்டடமும் இதனுடன் சேர்ந்து இடிந்து வீழ்ந்தது.
இவ் விபத்தில் நான்கு மாடிக் கட்டடத்தில் வசித்து வந்த 18 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 க்கும் அதிகமானோர் இடிபாடிகளில் சிக்கியிருக்கலாம் என்பதுடன் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
கட்டடங்கள் இடிந்து வீழ்ந்த தகவல் அறிந்த மீட்பு படையினரும் தீயணைப்புத் துறையினரும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி இதுவரை உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM