சிரிய முகாம்கள் மீது ரஷ்ய படையினர் நடத்திய வான் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் 10 பேர் உயரிழந்துள்ளதுடன் மேலும் பலர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போரினால் பாதிக்கப்படும் சிரிய மக்களுக்கான உதவும் அமைப்பு ஒன்று கூறும்போது,
சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் இடம்பெறும் சிரிய அரசுப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் தாக்குதல் காரணமாக குறித்த பகுதியிலிருந்து வெளியேறிய பொது மக்கள் சிரியாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ஐன் எல்-தினா கிராமத்திலும் ஒரு பள்ளியிலுள்ள முகாம்களிலும் தங்கியுள்ளனர்.
இந் நிலையல் குறித்த முகாம்கள் மீது ரஷ்ய படையினர் நடத்திய வான் வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் அசாத்துக்கும் சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகின்றது. இதில் அசாத்துக்கு உதவியாக ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM