(நா.தனுஜா)
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டமானது சூழலைப் பாதிப்பதுடன் இலங்கையின் வளங்களை சீனாவுக்கு விற்பதாகவும் அமைந்துள்ளது என துறைமுக நகரத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் தீபா சுபாஷினி தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காலிமுகத்திடலில் துறைமுக நகரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
துறைமுக நகரம் இயற்கையான முறையில் அன்றி செயற்கையாக அமைக்கப்படுகின்றது. இது முற்றாக சூழலைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதோடு நாட்டை தாரைவார்த்துக் கொடுக்கும் திட்டமாகவும் அமைந்துள்ளது. மேலும் இத் திட்டத்தினூடாக துறைமுக நகரத்தின் கட்டுமானத்திற்கென மீனவக்கிராமங்கள் அழிக்கப்படுவதுடன் வளங்கள் சுரண்டப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வருவதற்கு முன்னர் துறைமுக நகர திட்டத்தை ஆட்சிக்கு வந்தால் நிறுத்துவதாக கூறினார். ஆனால் தற்போது அவர் கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டு வருகின்றார் என்றார்.
மேற்படி போராட்டத்தின் போது துறைமுக நகரத்தின் பாதிப்புக்கள் தொடர்பில் புத்திஜீவிகள் பத்து பேரின் கருத்துக்கள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டதுடன் 'துறைமுக நகரப்பணியை" நிறுத்து என எழுதப்பட்ட பட்டங்களை பறக்கவிட்டு தமது எதிர்ப்புக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM