"போதைப்பொருள் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த மனித உரிமை அமைப்புகள் அக்கறை காட்டவில்லை"

Published By: Vishnu

17 Jul, 2018 | 04:07 PM
image

(நா.தினுஷா) 

இலங்கையில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு அக்கறை காட்டாத மனித உரிமைகள் அமைப்பு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற தீர்மானித்துள்ளபோது முந்தியடித்துக் கொண்டு கண்டனங்களை வெளியிடுகின்றன என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப் பொருள் குற்றச் செயல்களால் இன்று நாடு பாரிய பாதிப்பினை சந்தித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் எதுவும் வழங்காத மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றன இன்று அரசாங்கம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் போது அவற்றை குற்றமாக கருதுகின்றன.

போதைப் பொருள் குற்றச் செயல்களில் தொடர்புபடுவோர்களுக்கு மரண தண்டனை அழிப்பதற்கான ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்க்கத்தக்கதாகும். 

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் புதிய உறுப்பினர்களை கட்சிக்குள் சேர்க்கும் நடவடிக்கையும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47