வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேசசெயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து வட மாகாணசபை உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.
இதன்போது பிரதேச செயலாளரை அச்சுறுத்தும் விதமாக குறித்த மாகாணசபை உறுப்பினர் செயற்பட்டதாகவும் வீடமைப்பு திட்டமொன்றிற்கான அடிக்கல் நாட்டும் விழாவை தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஏற்பாடு செய்திருந்தது.
அந் நிகழ்வில் பிரதேச செயலாளரும் கலந்து கொண்டிருந்த நிலையில் அந் நிகழ்வுக்கு தன்னை அழைக்கவில்லை என்றே மாகாணசபை உறுப்பினர் பிரதேச செயலாளருடன் முரண்பட்டிருந்தார் என தெரிவித்தே வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் லிங்கநாதன் அவர்களே இது ஒன்றும் உங்கள் மாளிகை அல்ல, சபை பேச்சறிந்து பேசுங்கள், அரச பணி மக்கள் பணி, எமக்கு வேண்டாம் உங்கள் உரவால் அரச அதிகாரிகள் அச்சுறுத்தல் இன்றி பணியாற்ற இடமளியுங்கள், உங்கள் அரசியல் இங்கு வேண்டாம் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM