"நல்லாட்சி அரசாங்கம் மக்களின் எதிர்ப்பையே சம்பாதிக்கிறது"

Published By: Vishnu

16 Jul, 2018 | 02:37 PM
image

மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதனூடாக நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்பையே சம்பாதித்து வருகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமத் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

இன்று மாகாண சபைகள் மத்திய அரசால் பந்தாடப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகத்தான் நான் மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்துவது குறித்து அந்தந்த மாகாண சபைகளே தீர்மானிக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தேன்.

மக்களின் வாக்குகளினால் தெரிவான ஒரு ஆட்சி நிறுவனத்தை அந்த மக்களின் விருப்பின்றி தன்னிச்சையாக கையாளும் உரிமையை மத்திய அரசுக்கு மக்கள் வழங்கவில்லை. இவ்வாறு மேற்கொள்ளப்படுவது ஜனநாயகத்திற்கு விரோத செயலாகும்.

ஆகவே மாகாண சபைகளின் கால எல்லைக்குள்ளோ அதன் நிறைவிலோ தேர்தலை நடத்தும் அதிகாரம் அந்தந்த மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் மாகாண சபைகள் அதில் ஏதேனும் இழுத்தடிப்புக்களை செய்யுமாயின் அதில் மத்திய அரசு தலையிடும் அரசியலமைப்பு சிறந்ததாகும்.

எனவே தற்போது பிற்போடப்பட்டுள்ள தேர்தல்களை தேர்தல்களை பழைய முறையில் உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். அவ்வாறில்லாது புதிய முறையில் நடத்துவதாக கூறி மேலும் தேர்தல் பிற்போடப்பட்டாலோ அல்லது சிறுபான்மையினருக்கு எதிராக புதிய முறைமையில் நடததினாலே நாம் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14