ரயில்களில் அனுமதியின்றி வர்த்தகத்தில் ஈடுபட்டமை மற்றும் யாசகம் கோரியமைக்காக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற பிரதேசங்களில் ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு - கோட்டை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றங்களில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ரயில்களில் வர்த்தகத்தில் ஈடுபடல், யாசகம் கேட்டல் போன்ற செயற்பாடுகள், கடந்த முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இக்குற்றங்களைப் புரிந்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான சகல முறைப்பாடுகளையும் 011 23 36 614 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக முன்வைக்க முடியும் என, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM