மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்றிரவு 7.30 மணியளவில் ஏறாவூர், மீராகேணி அஹமட் பரீட் விளையாட்டுக் கழக இளைஞர்கள் ஆறு பேர் கொண்ட குழுவொன்று ஏறாவூர் நோக்கி மூன்று மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது புணானைப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து ஒன்றுடன் ஒன்று மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளொன்றின் பின்னால் அமர்ந்து வந்த ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய லாபீர் என்பவரே உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM