முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவிடமிருந்து பெற்ற நிதிகள் குறித்த அனைத்து விபரங்களையும் பகிரங்கப்படுத்த போவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்
சீனாவிடமிருந்து மகிந்த ராஜபக்ச பெற்ற நிதியுதவி குறித்த அனைத்து விபரங்களையும் அடுத்த வாரத்திற்குள் அம்பலப்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார். எழுத்து வடிவ ஆவணமாக இந்த விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மீண்டும் சர்வாதிகாரத்திற்கு இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பல உலகநாடுகள் சர்வாதிகாரத்தினால் அழிந்துள்ளன எனவும் ஜேவிபி தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதமே இலங்கையில் மிகவும் பிரபலமான அரசியலாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியமற்ற பல மோதல்கள் இடம்பெறும்,பகைமையுணர்வும் சந்தேகமும் நிலவும் நாடாக இலங்கை மாறக்கூடாது, என தெரிவித்துள்ள அவர் சர்வாதிகாரத்தினால் உருவாக்கப்பட்ட தேசம் எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
விஜயகலாவுக்கு எதிராக தெற்கை அணி திரட்டுவதும், வடக்குக்கு எதிராக தெற்கை தூண்டிவிடுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களை தூண்டிவிடுவதும் நாட்டினை காப்பாற்றும் கொள்கையாக இன்று மாறியுள்ளது. இந்த இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும்.
இன்று மக்கள் மத்தியில் உள்ள பிரபல அரசியல் இனவாதமாகும். முஸ்லிம் மக்கள் மத்தியில் முஸ்லிம் இனவாதம், தமிழர் மத்தியில் தமிழ் இனவாதம், சிங்களவர் மத்தியில் சிங்கள இனவாதம் பரப்பப்பட்டு வருகின்றது. இதனால் கடந்த காலங்களில் நாம் பெற்றுக்கொண்ட நன்மைகள் என்ன. ஆகவே இன ஐக்கியத்தை உருவாக்கும் தலைமைகளை உருவாக்க வேண்டும். மிகவும் முக்கியமான தேவையாக இது உள்ளது. இன்று நடைமுறையில் உள்ள அரசியல் கலாசாரத்தினால் சமூகத்தில் முன்னெடுத்து செல்ல முடியாது.
ஆகவே இந்த அரசியல் கலாசாரத்தை நாம் மாற்றியமைக்க வேண்டும். இந்த சாக்கடை அரசியலில் இருந்து வெளிவர வேண்டும். மாற்று சிந்தனைகளை உருவாக்க வேண்டும். வடக்கிலும் தெற்கிலும் பொது மக்களின் இரத்தம் இந்த நாட்டில் படிந்துள்ளது. இந்த நிலத்தில் அவர்களின் இரத்தம் ஊறியுள்ளது. இதனை உணர்ந்து நாம் மாற்றம் காணவில்லை என்றால் நாம் மனிதர்கள் என்ற அடையாளத்தை கூற முடியாது.
இத்தனை இழப்புகளுக்கு பின்னரும் நாம் மாற்றம் காணவில்லை என்றால் நாம் வாழ்வதில் அர்த்தம் இல்லை. சர்வாதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு நாடுகளில் எழுந்தது. ஆனால் சர்வாதிகாரம் மூலமாக கட்டியெழுப்பப்பட்ட நாடு ஒன்றும் இல்லை. அராஜக கொள்கை மூலமாக கட்டியெழுப்பும் முயற்சிகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையிலும் அதுவே இன்று இடம்பெற்று வருகின்றது. நாட்டை கட்டியெழுப்பும் கொள்கை என கூறிக்கொண்டு நாட்டை துண்டுபோடும் கொள்கையில் பல தலைவர்கள் உருவாகி வருகின்றனர். அதேபோல் பொருளாதார கொள்கையும் எமது நாட்டுக்கு ஏற்ற வகையில் இல்லை. சீனாவுக்கும், இந்தியாவுக்கும் நன்மை தரக்கூடிய கொள்கையே இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எமக்குக் கடனையும் கொடுத்து இறுதியில் நிலத்தையும் அபகரித்துக் கொள்கின்றனர்.
விஜயகலாவுக்கு எதிராக தெற்கை அணிதிரட்டுவதையும், வடக்குக்கு எதிராக தெற்கை தூண்டிவிடுவதையும், முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களை தூண்டிவிடுவதையும் நாட்டினை காப்பாற்றும் கொள்கையாக கூறுகின்றனர். இதனை தோற்கடிக்க வேண்டும். அதேபோல் எமது தலைவர்களை சர்வதேசம் விலைக்கு வாங்கும் நிலைமையை தடுக்க வேண்டும். கடந்த கால தலைவர்கள் அனைவருமே சர்வதேச நாடுகளுக்கு விலை போய்விட்டார்கள்.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தொடர்பில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் இன்னும் மறுத்ததாக மற்றும் அதற்கான உறுதி யான ஆதாரங்களை முன்வைத்ததாக தெரியவில்லை. அவரால் அதனை நிராகரிக்க முடியாது. இந்த விவகாரம் குறித்து அடுத்த வாரம் பாராளுமன்ற விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது குறித்த காசோலை இலக்கம், மாற்றப்பட்ட வங்கி, யாருடன் சென்று மாற்றினார்கள் என்ற தகவல்களுடன் இந்த உண்மைகளை வெளிப்படுத்த நாம் தயார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM