சுழற்பந்துவீச்சாளர்களை அடித்து ஆட முயன்றதே தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நான் சிறப்பாக துடுப்பெடுத்தாடியதற்கு காரணம் என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதித்தால் உங்களால் சிறப்பாக விளையாட முடியாத நிலையை அவர்கள் உருவாக்குவார்கள் என தெரிவித்துள்ள திமுத் கருணாரட்ண இதன்காரணமாக கால்களை பயன்படுத்தி முன்னோக்கி சென்று அவர்களை அடித்து ஆட முயன்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நான் ஓட்டங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முயல்கின்றேன் எனவும் தெரிவித்துள்ள திமுத் நீங்கள் கால்களை பயன்படுத்தி நகர்ந்து சிறிது துணிச்சலுடன் ஆட முற்பட்டால் சுழற்பந்துவீச்சாளர்கள் தடுமாறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது சிறந்த தடுப்பாட்டம் அவசியம் அதேவேளை அவர்கள் உங்களை ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னர் நீங்கள் அவர்களை ஆதிக்கம் செய்யவேண்டும் எனவும் திமுத் தெரிவித்துள்ளார்.
நான் இன்னமும் முழுமையான துடுப்பாட்ட வீரனாக மாறவில்லை ஆனால் அதனை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM