அப்பாவை தேடித் தாருங்கள் ; கண்ணீரில் நனைந்தது மண்டபம்

Published By: Vishnu

15 Jul, 2018 | 06:55 PM
image

2009 இல்  அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பாவை தேடித்தாருங்கள் என ஒன்பது வயது சிறுமியொருவர் காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகளிடம் உருக்கமான கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.

இன்று கிளிநொச்சி கூட்டுறவு  மண்டபத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்குமிடையிலான சந்திப்பின்போதே குறித்த சிறுமி மேற்கண்ட கோரிக்கையை காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகளிடம் விடுத்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் சரணடைந்திருந்தனர். இவர்களை இராணுவத்தினர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் சென்றிருந்தனர்.

இதன்போது விடுதலைப்புலிகளின் திரைப்பட பிரிவில் கடமையாற்றிய திலக் என்பவரும் சரணடைந்திருந்தார்.  இவ்வாறு சரணடைந்த திலக் என்பவரின் ஒன்பது மகளே இன்று மிக  உருக்கமாக தனது அப்பாவை தேடித்தாருமாறும் தான் இதுவரை அப்பாவின் முகத்தை பார்க்கவில்லை என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்போது கூட்டுறவு மண்டபத்திலிருந்த கிராம அலுவலர்கள்  உட்பட பலர் கண்ணீர்விட்டு அழுதமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08