விக்னேஸ்வரனிடம் தகவல் பெறவேண்டிய அவசியமில்லை - இராணுவ பேச்சாளர் 

Published By: Daya

14 Jul, 2018 | 04:08 PM
image

(நா.தனுஜா)

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தகவல் பெற வேண்டிய அவசியம் இராணுவத்தினருக்கு இல்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை உரிய விதத்தில் செயற்படுத்துவோம் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடமாகாண அரச அதிகாரிகள் இராணுவத்தினருக்கு எவ்விதமான தகவல்களையும் வழங்கக் கூடாது எனவும், அவ்வாறு வழங்க வேண்டிய அவசியம் ஏற்படுமாயின் தன்னிடம் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அரசியலில் ஈடுபடுபவர்கள் கூறுகின்ற இவ்வாறான கருத்துக்களை நாங்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அத்தோடு அவர்களிடம் தகவல்களை பெற வேண்டிய அவசியம் எதுவும் இராணுவத்தினருக்கு இல்லை.

அவருடைய கருத்திற்கு உரிய பதிலை அரசாங்கமே வழங்க வேண்டும். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்தல் தொடர்பில் இராணுவத்தினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை உரிய வகையில் செயற்படுத்துவோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31