ஐக்கிய நாடுகள் உணவு விவசாய நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 6ஆவது உலக வன வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் மாநாடு மற்றும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி இன்று நண்பகல் ரோம் பயணமானார்.
பேண்தகு அபிவிருத்தி நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக வனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வனப் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களின் ஒருங்கிணைப்பை பலப்படுத்தவும் இம்மாநாடு விரிவான பங்களிப்பை வழங்குகின்றது.
உலக வன வாரம் புதிய அறிவு மற்றும் இது வரையில் அடையப்பெற்றுள்ள முக்கிய அடைவுகள் குறித்து உறுப்பு நாடுகளுக்கிடையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கான சிறந்ததோர் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
இலங்கையின் வன அடர்த்தியை 29% – 32% வரை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள கொள்கை சார்ந்த தீர்மானங்கள் மற்றும் வன வளங்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM