(எம்.எப்.எம்.பஸீர்)
தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரன் தமிழில் ஆற்றிய உரையை சிங்கள மொழியில் மொழி பெயர்த்து, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு (ஓ.சி.பி.டி) பொறுப்பதிகாரியிடம் கையளிக்கு மாறு கொழும்பு பிரதான நீதிவான் ரங்க திஸா நாயக்க நேற்று அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பில் நேற்று திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினர், இடையீட்டு மனு ஊடாக கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில், விஜயகலா தொடர்பான வழக்கினை விசாரணைக்கு எடுத்தனர். இதன்போது அவர்கள், விஜயகலா மகேஸ்வரன் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆற்றிய உரையின் செம்மைப்படுத்தப்படாத பதிவுகள் இரண்டை நீதிமன்றில் கையளித்தனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பெற்ற உரைப் பதிவுகளையே அவர்கள் இவ்வாறு நீதிமன்றிடம் கையளித்தனர். இவ்வாறு நீதிமன்றிடம் கையளித்து, அதனை அரச கரும மொழிகள் திணைக்களம் ஊடாக மொழி பெயர்ப்புச் செய்ய திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றைக் கோரினர்.
இதனைக் கருத்தில் கொண்ட நீதிவான், ஒலி, ஒளி வடிவில் உள்ள விஜயகலா மகேஸ்வரனின் தமிழ் மொழி மூல உரையை அப்படியே எந்த வித்தியாசமும் இல்லாமல் எழுத்துருவுக்கு மாற்றி அவ்வாறு எழுத்துருவுக்கு மாற்றப்பட்ட தமிழ் பிரதியை சிங்கள மொழிக்கு நேரடியாக மொழிமாற்றம் செய்து திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் கையளிக்குமாறு அரச கரும மொழிகள் திணைக்களத்தின் அரச மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
இந் நிலையில் நேற்று இது குறித்து மேலும் தகவல்களை நீதிவானிடம் வெளிப்படுத்திய விசாரணையாளர்களான திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு, விஜயகலாவின் உரை தொடர்பில் முறைப்பாடளித்த அனைவரினதும் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் உரையாற்றும் போது மேடையில் இருந்த பிரமுகர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெறுவதாக வும் அறிவித்தனர்.
அதன்படி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சரின் வாக்கு மூலத்தை பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினர் நீதிவானுக்கு அறிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM