(ஆர்.யசி)
நாட்டு மக்களின் பொது நலனுக்காக குற்றங்களை தடுக்கவும் சமூகத்தை நல்வழிப்படுத்தவும் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவதில் தவறில்லை என இலங்கையின் பிரதான பெளத்த பீடங்களான அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடங்கள் தெரிவித்துள்ளன.
பெளத்த கொள்கையின் மேலாதிக்கம் இருந்த போதிலும் சமூக சிந்தனைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்கட்டியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் கூடிய பாரிய குற்றங்களை செய்யும் சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் பெளத்த பீடங்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளன.
இது தொடர்பில் அஸ்கிரிய பீட ஆவணவாக்கல் அதிகாரி வன மெதகம தம்மானந்த தேரர் கூறுகையில்,
நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களை பாதுகாக்க சட்டங்கள் தேவைக்கேற்ப பிரயோகிக்கபட வேண்டும். மன்னர் காலமாக இருந்தாலும் சரி அல்லது நிகழ்கால ஆட்சியாக இருந்தாலும் சரி அதில் மக்கள் நலன் சார் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் முதன்மை கடமையாகும்.
குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாட்டுக்கு நன்மையையும் மக்கள் மத்தியில் அமைதியும் ஒழுக்கமும் உருவாகும். இந்த இடத்தில் பெளத்த தர்மம் என்பதை விடவும் நாட்டினை நல்வழிப்படுத்த பெளத்த தலைமைகள் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்கவும் வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இது குறித்து அஸ்கிரிய பீட அனுநாயக தேரர் திவுல்கும்புரே விமலதம்ம தேரர் கூறுகையில்,
நாட்டின் ஆட்சி பெளத்த கொள்கையில் தீர்மானிக்கப்பட்டாலும் கூட நாட்டின் நன்மை, மக்களின் பாதுகாப்பு என்ற விடயத்தில் பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடு, பெருமளவிலான மக்களின் எண்ணம் என்பவற்றை கருத்தில் கொண்டு அதிக நன்மை ஏற்படும் தீர்மானங்களை கையாள வேண்டும்.
ஜனாதிபதி பெளத்த தர்ம கொள்கைக்கு அமைய நடந்துகொள்ளும் நபராக இருந்தாலும் கூட இப்போது சமூக நலன் கருதி சில தீர்மானங்களை எடுத்துள்ளார். இதில் பாரிய சமூக விரோத குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினை அவர் முன்வைத்துள்ளார். இதன் மூலம் நாட்டின் மோசமான சம்பவங்கள் குறைவடைந்து அதன் மூலமாக ஒழுக்கமான, அமைதியான, அனைத்து மக்களும் வாழக்கூடிய சூழ்நிலை ஒன்றி உருவாகும் என அவர் எண்ணுவதாக நாம் கருதுகின்றோம்.
அவ்வாறு சட்ட ரீதியில் இறுக்கமான நகர்வுகளை முன்னெடுப்பது அவரது கடமையாகும். ஆகவே சில சந்தர்ப்பங்களில் மத கொள்கைக்கு அப்பால் சமூகநல நற்சிந்தனை எமக்கு வர வேண்டும். ஆகவே இவ்வாறு சமூகத்தை சீரழித்து மக்களின் அமைதியை கெடுக்கும் ஒரு சில நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்படுவது சமூகத்துக்கு ஆரோக்கியமானதாக அமையும் என நினைக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM