போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்து.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த பட்டியலை தயாரித்துள்ளோம் என தெரிவித்துள்ள நீதியமைச்சு அதிகாரியொருவர் குறிப்பிட்ட பட்டியலை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மரண தண்டனை குற்றவாளிகளிற்கு மரண தண்டனையை நிறைவேற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன எதிர்த்துள்ளார்.
அரசாங்கத்தின் இன்னொரு தற்காலிக அறிவிப்பு இது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்னர் விடுத்த தற்காலிக அறிவிப்புகள் போன்ற ஒன்றே இந்த அறிவிப்பும் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன மரண தண்டனை என்பது நாட்டின் சட்டத்தின் ஒரு பகுதியாக நான்கு தசாப்தங்களாக விளங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாததாக மாறியுள்ளது என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டிற்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM