வெளிநாட்டு நாணய தாள்களுடன் மூவர் கைது 

Published By: Daya

13 Jul, 2018 | 11:51 AM
image

சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு நாணய தாள்களை மறைத்து  இலங்கைக்கு கடத்திவர முயன்ற இந்திய பிரஜை ஒருவரும் மற்றும் இரு இலங்கை பிரஜைகளும்  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு UL 306 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து  போது குறித்த நபர்களிடமிருந்து சுங்க அதிகாரிகள்  நாணய தாள்களை கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவித்தாவது,

கைது செய்யப்பட்ட இந்தியர் 40 வயதுடையவர் எனவும் இலங்கையர்கள் இருவரும் 40 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து சுமார்  48 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு  நாணய தாள்களை வைத்திருந்ததாக சுங்க ஊடக செய்தித் தொடர்பாளர்  தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட வௌிநாட்டு நாணயங்களில் 153,250 யூரோ, 52,950 அமெரிக்க டொலர்கள், 264,000 சவூதி ரியால், 18,500 கட்டார் ரியால் என்பவ அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11