(ரி.விரூஷன்)
வடக்கில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு பொதுமக்கள் பூரண ஆதரவு வழங்க வேண்டும். அது தொடர்பான தகவல்களை மக்கள் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
வடக்கில் அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்றைய தினம் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நிலையில் அங்கு அவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார கருத்து தெரிவிக்கையில்,
முப்பதாண்டுகால யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கில் அநேகமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தற்போது மக்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கின்றார்கள். மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளில் மென்மேலும் விருத்தியடைந்து வருவதுடன் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காணப்படுகின்றது.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, சட்ட மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுமாறு நான் ஆலோசனை வழங்கியிருந்தேன். அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சரியான சேவையை செய்கின்றார்கள் என நான் கூறிக் கொள்கின்றேன்.
அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் சிலவற்றை கூற வேண்டியுள்ளது. அரச முகாமைத்துவ ஆட்சேர்ப்பின் போது 131 பேரினை உள்வாங்கியிருந்தோம். ஆனால் அதில் வடக்கிலிருந்து 31 பேர் மாத்திரமே வந்திருந்தார்கள்.
அதேபோன்று பொறியியலாளர்கள், கணக்காளர்கள் போன்ற துறைகளிலும் இங்கிருந்து வருவோரது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இலங்கையர் என்ற ரீதியில் எல்லோருக்கும் சமனாகவே சந்தர்ப்பங்களை வழங்கிவருகின்றோம்.
தற்போது வடக்கு, கிழக்கில் 1500 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். இவை தவிர கிராம மட்டத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அதற்கான வேலைத் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் பதிலளித்திருந்தனர்.
கேள்வி: பொலிஸாருடன் தற்போது இடம் பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக கூறுங் கள்?
பதில்: ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், வடக்கில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எனக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்கள். அந்தவகையில் அது தொடர்பாக பொலிஸாருடன் கலந்துரையாடியிருந்தேன்.
இங்கு சட்ட மற்றும் ஒழுங்கினை நிலைநாட்டும் வகையில் செயற்படுமாறு பொலிஸாருக்கு நான் ஆலோசனை வழங்கியிருந் தேன்.
கேள்வி: யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதே ?
பதில்: இங்கே இடம்பெறுகின்ற வாள்வெட்டுச் சம்பவங்கள், பாலியல் துன்புறுத் தல் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகநபர்களை கைது செய்துள்ளோம். அவர்களை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளோம். விசேடமாக இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்ற போது பொது மக்கள் அது தொடர்பான தகவல்களை வழங்க வேண் டும். அதனூடாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
கேள்வி : வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறும் நிலையில் முக்கியமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா ?
பதில்: இது தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பதில் வழங்குவார்.
கேள்வி: வன்முறைச் சம்பவங்கள் காலத்திற்கு காலம் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் ஏன் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
பதில்: இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது அது தொடர்பாக முன்னுரிமை கொடுத்து விசாரணை செய்ய வேண்டும். அதேநேரம் பொதுமக்களும் இது தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும். தற்போது இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. அதனூடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கேள்வி: புதிதாக சட்ட ஒழுங்கு அமைச்சராக பதவியேற்ற நிலையில் முதல் தடவை யாக வடக்கிற்கு வந்துள்ளீர்கள். இந்நிலை யில் இங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஏன் அரசியல் தலைமைகளுடனோ பாராளுமன்ற உறுப்பினர்களுடனோ பேசவில்லை?
பதில்: முதலாவதாக பொலிஸாருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருக்கின்றோம். இதனை தொடர்ந்து மாலை ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர், மாவட்ட அரச அதிபர், யாழ்.மாநகர மேயர் ஆகியோரை சந்திக்கவுள்ளேன். வடமாகாண முதலமைச்சர் இங்கு இல்லை.
கேள்வி: வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதனை கடத்துவதில் ஈடுபடுபவர்களை ஏன் கைது செய்யவில்லை?
பதில்: போதைவஸ்து தொடர்பில் பல கைதுகள் இடம்பெறுகின்றன. உதாரணமாக அண்மையில் கூட அதிகளவு பெறுமதியான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் விசேட சுற்றிவளைப்பு தேடுதல்களையும் மேற்கொள்ளவுள்ளோம். இவை தவிர போதைப்பொருள் தொடர்பான கைது நடவடிக்கையின் போது அதனோடு சந்தேகநபர்களுமே கைது செய்யப்படுகின்றார்கள்.
கேள்வி: இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பான கருத்து குறித்து என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ?
பதில்: விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பாக தெற்கிலும் வடக்கிலும் ஆதரவாகவும் எதிராகவும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. நாட்டில் உள்ள சட்டத்தின் படி, அவ் உரை தொடர்பாக புலன் விசாரணைகள் நடத்தப்பட்டு அதன் கோவைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் சட்டமா அதிபரது ஆலோசனைக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சட்ட ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
கேள்வி : வடக்கில் இராணுவத்தின் இருப்பு அவசியமானதா?
பதில்: இராணுவத்தின் சேவையானது இன்றியமையாததாகும். இயற்கை அனர்த் தங்களின் போது இராணுவத்தின் தேவை அவசியமானதாகும். அதேபோன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் அதிகம் தேவைப்படு கின்றார்கள். இவர்கள் மக்களோடு இணைந்து மக்களுக்குரிய சேவைகளை செய்ய தேவை.
கேள்வி : இராணுவம் பொலிஸ் ஆகியோர் மக்களுக்கான சேவை செய்ய தேவை என கூறுகின்றீர்கள். ஆனால் விடுதலைப் புலி கள் இருந்தால் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாது என மக்கள் ஏன் கூறுகின்றார்களே?
பதில் : அது பிழையான எண்ணமாகும். தென் பகுதியிலும் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அங்கும் பாதாள உலக குழுவினர் இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகள் காலத்தில் இவ்வாறான வன்முறைச் சம்ப வங்கள் இடம்பெறவில்லை என மக்கள் கூறுவதானது அவர்களது அறியாமையினால் வெளியிடப்படும் விடயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM