குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக் ஷவின் மெய்ப்பாதுகாவலர் ஒருவருக்கு சொந்தமான காணியில் அதிரடி சோதனையொன்று நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேஜர் நெவில் வன்னியாரச்சியின் மனைவிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் காணியிலேயே தங்கம் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு தரப்பினரால் இவ்வாறு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனது மனைவியின் தந்தையுடைய உடல் புதைக்கப்பட்டுள்ள வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் உள்ள கல்லறைக்கு அருகில் இவ்வாறு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மேஜர் நெவில் வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்றுக் காலை 10 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவ்விடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் பணம் போன்றவற்றை தேடுவதற்காகவே அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பிற்பகல் 03 மணி வரை இரண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து எந்தப் பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகள், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட உத்தரவுக்கிணங்க அகழ்வு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM