டயகம பகுதியில் தோட்ட தேயிலை மலையில் இருந்து சிறுத்தை குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம இலக்கம் ஒன்று தோட்டத்தில் தேயிலை மலையில் இருந்து இன்று மாலை 4.00 மணியளவில் சிறுத்தை குட்டியொன்றை பொது மக்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள் உயிருடன் மீட்டு வனவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த போது தேயிலை மலையில் மூன்று சிறுத்தை குட்டிகள் ஓடியதை கண்ட. தோட்டத்தொழிலாளர்கள் ஒரு குட்டி மாத்திரம் பொது மக்களால் பிடிக்கப்பட்டு தோட்ட அதிகரிகளிடம் ஒப்படைத்த பின் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து நுவரெலியா வனவளத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் இந்த சிறுத்தை குட்டி ஒப்படைக்கப்பட்டது.
குறித்த தேயிலை மலையை சுற்றி சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் பாரிய காடுகள் காணப்படுவதாகவும், அங்கிருந்து உணவு தேடுவதற்காக தனது தாய் சிறுத்தையுடன் வந்திருக்கலாம் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தை குட்டி பிறந்து மூன்று மாதங்கள் பூரத்தியடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அண்மைக்காலமாக மலையகத்தின் பல பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM