இந்தியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்குப் பிறகு ஒருவேளை ஓய்வுபெறும் முடிவை நான் எடுப்பேன் என்று இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், இருபதுக்கு 20 அணியின் தலைவருமான லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி தற்போது பங்களாதேஷில் ஆசியக் கிண்ணத்தில் விளையாடி வருகிறது.
இதில் லசித் மலிங்க தலைமையிலான இலங்கை அணி முதல்போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சந்தித்தது.
இந்தப் போட்டியில் 14 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.
இந்த வெற்றிக்குப் பின் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே தான் ஓய்வுபெறுவது குறித்து சிந்திப்பதாக லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், எனக்கு இப்போது 32 வயதாகின்றது. கிட்டத்தட்ட 12 வருடங்களாக நான் தேசிய அணியில் விளையாடிவருகிறேன். ஆனாலும் நான் அடிக்கடி காயத்திற்கு உள்ளாகிறேன். இது குணமாவதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற லசித் மலிங்க தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் மட்டுமே விளையாடிவருகிறார்.
இந்நிலையில் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவது குறித்து தற்போது சிந்திப்பதாக அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM