பாடசாலையில் பாதாள அறையில் குழந்தைகள் அடைத்துவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி கல்வித்துறைக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
டில்லியின் மத்திய பகுதியில் உள்ள ஹவுஸ் காஷி என்ற இடத்தில் தனியார் பாடசாலை இயங்கி வருகிறது. பாலர் வகுப்பில் படித்து வரும் குழந்தைகள் சிலர் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த பாடசாலை நிர்வாகத்தினர் கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகளை தனியாக அழைத்து சென்று, பாடசாலையின் கீழ் தளத்தில் உள்ள பாதாள அறையில் அடைத்துவிட்டனர்.
காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பாதாள அறையில் அடைத்துவைக்கப்பட்டதால் அந்த குழந்தைகள் அழுது அழுது சோர்வடைந்தனர். மாலையில் தங்களுடைய குழந்தைகளை அழைத்து செல்வதற்காக வந்த பெற்றோர் குழந்தைகள் மிகவும் சோர்ந்துபோய் இருப்பதை கண்டு விசாரித்த போது, அவர்களுக்கு நேர்ந்த கொடூரம் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பாடசாலை நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் தனியார் பாடசாலை மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குறித்த நிலையில் பாடசாலை பாதாள அறையில் குழந்தைகள் அடைத்துவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கல்வித்துறைக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM