(எம்.எம்.மின்ஹாஜ்)
மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அவசியம் என்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பவந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆகவே அவரது கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும். முடியுமாகவிருந்தால் அதனை நடமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
அத்துடன் உதயங்க வீரதுங்கவை நான் அழைத்து வருவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அப்படியாயின் எங்கே உதயங்க வீரதுங்க? ஏன் மஹிந்த அவரை இன்னும் அழைத்து வரவில்லை. எனினும் அவர் தற்போது டுபாய் பொலிஸின் கட்டுப்பாட்டில் உள்ளார். அவர் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM