மேற்கிந்திய அணியுடனான தொடர் தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதற்கான மனோபலத்தை எங்களிற்கு வழங்கியுள்ளது என இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் ரொசேன் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை தென்னாபிரிக்க அணிகளிற்கு இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை காலியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
டேல் ஸ்டெய்ன் ரபாடா பிலான்டர் மூவரும் எங்களிற்கு கடும் சவாலாக அமையப்போகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் என்னை பொறுத்தவரை மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரே மிகவும் கடினமானது எனகுறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஸ் அணி விளையாடும் விதத்தை பார்க்கும்போது மேற்கிந்திய தீவுகளின் ஆடுகளம் எவ்வளவு சவாலானது என்பது விளங்கும் அவர்கள் தங்கள் ஆடுகளங்களில் புற்களை நிறைய வைத்துள்ளார்கள்,மேலும் பிங் நிற பந்தை எதிர்கொள்ளவேண்டிய சவாலையும் சந்தித்தோம், அங்கு துடுப்பெடுத்தாடுவது மிகவும் கடினமானதாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அணியில் மிகவும் வேகமாக பந்து வீசக்கூடியவர்கள் உள்ளதால் நாங்கள் ரிவேர்ஸ் ஸ்விங்கினை விளையாடுவதற்கு பயிற்சி எடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM