மாணவியை பூங்காவிற்கு அழைத்துச் சென்று செய்த செயலால் பொலிஸாரிடம் கையும் மெய்யுமாக சிக்கிய இளைஞர்

Published By: Digital Desk 7

11 Jul, 2018 | 03:10 PM
image

அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியை இளைஞர் ஒருவர் கார் ஒன்றில் ஏற்றி பூங்காவிற்கு அழைத்துச் சென்று மாணவியின் சீருடையை கழைந்து வேறு உடையை அணிய வைத்துக் கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில் அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்புத்தேகமவிலிருந்து அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவியை கடந்த 9ஆம் திகதி அதிசொகுசு கார் ஒன்றில் ஏற்றி நகரில் அமைந்துள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்ற போது பொலிஸாரின் அவசர அழைப்பிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே காரை பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளதோடு மாணவியையும் மீட்டுள்ளனர்.

மாணவியையும் இளைஞரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மாணவியின் பெற்றோருக்கும் பாடசாலை அதிபருக்கும் பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

மாணவியை அழைத்துச் சென்று பாடசாலை சீருடையை மாற்றி வேறு உடை அணிவித்து அவருடன் உல்லாசம் அனுபவிக்க குறித்த இளைஞர் திட்டம் தீட்டியிருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் இரு தரப்பு பெற்றோர்களும் வரவழைக்கப்பட்டு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40