அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியை இளைஞர் ஒருவர் கார் ஒன்றில் ஏற்றி பூங்காவிற்கு அழைத்துச் சென்று மாணவியின் சீருடையை கழைந்து வேறு உடையை அணிய வைத்துக் கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில் அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்புத்தேகமவிலிருந்து அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவியை கடந்த 9ஆம் திகதி அதிசொகுசு கார் ஒன்றில் ஏற்றி நகரில் அமைந்துள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்ற போது பொலிஸாரின் அவசர அழைப்பிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே காரை பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளதோடு மாணவியையும் மீட்டுள்ளனர்.
மாணவியையும் இளைஞரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மாணவியின் பெற்றோருக்கும் பாடசாலை அதிபருக்கும் பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மாணவியை அழைத்துச் சென்று பாடசாலை சீருடையை மாற்றி வேறு உடை அணிவித்து அவருடன் உல்லாசம் அனுபவிக்க குறித்த இளைஞர் திட்டம் தீட்டியிருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் இரு தரப்பு பெற்றோர்களும் வரவழைக்கப்பட்டு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM